"பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த விரும்பாதவர் ஜெயலலிதா" -முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பை கடைசி வரை விரும்பாதவர் ஜெயலலிதா எனவும், தற்போதைய பினாமி அரசு வரியை உயர்த்திருப்பது தவறான கொள்கை முடிவு என முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை காலை 11 மணக்கு ஓ.பி.எஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் அணிக்கு வெற்றி வாய்பிருப்பதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பிற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை உணர்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும் என்றார். 

பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்திரவு படியோ தேர்தல் ஆணைய உத்திரவுபடியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வெகுவிரைவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகள் கேட்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆவல் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தங்களுக்கு ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர், கல்வி துறையின் செயல்பாடுகள் ஜெயலலிதா விரும்பிய படி இருக்க வேண்டும் எனவும் பல சவால்கள் கல்வித்துறை முன்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...